புயல் காரணமாக டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தரைக்காற்று 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மக்களுக்கு வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.