ஈரோடு மாவட்டத்தில் உள்ள கேசரிமங்கலம் பகுதியில் கட்டிட தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். திருமணமான ஒரு மாதத்திலேயே பிரகாஷின் மனைவி பிரிந்து சென்று விட்டார். கடந்த ஜனவரி மாதம் பிரகாஷ் மீன்பிடிப்பதற்காக மண்புழுக்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 7 வயது சிறுமிக்கு பிரகாஷ் பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பிரகாஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் பிரகாஷுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.