திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த விழாவை முன்னிட்டு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிற்பங்கள், மண்டபங்கள், கோபுரங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றது. ஏராளமானோர் இன்றும் கோவிலுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முருகர் கோவிலில் மூலவர் சன்னதிக்கு செல்லும் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு உற்சவர் மண்டபம், நடராஜர், சின்ன குமார சாமிக்கு என தனி தனி மண்டபம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் பள்ளியறை மண்டபம் முழுவதும் நன்கொடையாளர் மூலம் 35 லட்ச ரூபாய் செலவில் வெள்ளி மூலம் பூசிய தகடு பொருத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி 54 கிலோ வெள்ளியால் ஆன தகடு பொருத்தம் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.