கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கீழ்மத்தூர் ஏரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முத்து, வரதராஜ், கேசவன், குப்பன், அண்ணாமலை, ராஜேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், 2500 ரூபாய் பணம், சீட்டு கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.