கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பச்சூரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 26- ஆம் தேதி சிலம்பரசன் மரத்தில் ஏறி புளி பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சிலம்பரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிலம்பரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.