தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் பேசிய முதல்வர், ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் பணியிடங்களை நிரப்பும் வகையில் இன்று 1598 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம், ஆட்சியில் இருக்கும் போது மக்களுக்கான திட்டங்களை தீட்டுவோம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.