வியட்நாமை சேர்ந்த புய் தி லோய் என்ற 75 வயது மூதாட்டி ஒருவர் 50 வருடங்களாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகின்றார். 1963ஆம் ஆண்டில் இவரை மின்னல் தாக்கியதில் இருந்து உணவு உண்ணும் பழக்கத்தை கைவிட்டு உள்ளார்.

உணவின் வாசனை அவருக்கு குமட்டலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். தற்போது தன்னுடைய குடும்பத்தினருக்கு உணவு சமைத்தாலும் அதனை ருசி பார்ப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 50 வருடங்களாக மூதாட்டி தண்ணீர் மற்றும் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.