நான் 85 -90 மணி நேரம் உழைத்தது வீணாகவில்லை என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வாரத்தில் 6 நாட்கள் என, 85 -90 மணி நேரம் நான் உழைத்துள்ளேன். தற்போது செழிப்பாக உள்ள ஒவ்வொரு நாடும் முன்பு கடினமாக உழைத்துள்ளன. வறுமையில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி கடின உழைப்புதான் என, என் பெற்றோர் கற்றுக்கொடுத்துள்ளனர். நான் அப்படி உழைத்தது வீணாகவில்லை என்று தெரிவித்தார்.