இந்தியா 1994 ஆம் வருடத்தில் இருந்து நேபாளுக்கு தேவையான ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது 34 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பள்ளி பேருந்துகள் என 84 வாகனங்களை இந்தியா நேபாளுக்கு வழங்கியுள்ளது.

இந்த வாகனங்களுக்கான சாவிகளை இந்தியன் அம்பாசிடர் நவீன் ஸ்ரீவஸ்தவா கல்வி அமைச்சர் அசோக் குமார் ராய் தலைமையில் சம்மந்தப்பட்ட துறையிடம் வழங்கியுள்ளார்.  1994-ல் இருந்து தற்போது வரை 974 ஆம்புலன்ஸ்களும் 234 பள்ளி பேருந்துகளும் நேபாளுக்கு இந்தியா வழங்கியுள்ளது.