சென்னையை அடுத்த தாழம்பூரில் பழைய பாலடைந்த பங்களாவில் கை, கல்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் எரித்த நிலையில் கிடைப்பதாக காவல்துறையினுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தீவிர விசாரணையில், எரிந்து நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் நாவலூர் மப்பேடு பகுதிகள் வசித்து வந்த மதுரையைச் சேர்ந்த ஐ டி ஊழியர் நந்தினி (25 ). இவருடைய முன்னாள் காதலன் வெற்றி (28 வயது). இவரை கைது செய்து காவல் துறை விசாரணை நடத்தினார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், நந்தினியும், வெற்றியும் மதுரை கல்லூரியில் படிக்கும் பொழுது ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளார்கள். ஐந்து வருடங்களாக தொடர்ந்து இவர்களுடைய காதலில் வெற்றி தன் பாலின ஈர்ப்பாளர் என்பது நந்தினிக்கு தெரிய வர திருநங்கை என்று கூறி அவரை விட்டு விலகி உள்ளார். இருப்பினும் அதன் பிறகு நண்பர்களாக பழகி வந்துள்ளார்கள். தற்போது தனியார் ஐடி நிறுவனத்தில் பணி செய்து வந்த நந்தினி ராகுல் என்பவரை கடந்து ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த வெற்றி நந்தினியிடம் ராகுலிடம் பேசக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் கேட்காத நந்தினியை பிறந்த நாளுக்கு கோயிலுக்கு அழைத்து சென்று விட்டு சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக கூறி  பாலடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக சங்கிலியால் கட்டி போட்டிருக்கிறார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளார். அதன் பிறகு அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். சர்பிரைஸ் கிப்ட் தருவதாக கூறி காதலியை முன்னாள் காதலன் எரித்து கொன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.