திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமியின் செயலில் மாற்றங்கள் தெரியவே, அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது தெரியவந்தது.

விசாரணையில் வேன் கிளீனராக பணியாற்றி வந்த 17 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது. இதனையடுத்து, தர்ம அடி கொடுத்து அந்த சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் போக்ஸோ சட்டத்தில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.