தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் பகுதியில் பொன் கற்பகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக கட்சியின் நிர்வாகி. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி பொன் கற்பகராஜை  காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் 468 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பொன் கற்பகராஜ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.