சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிக்கு சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமையை தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன சிறுமி கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது அதே பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். அதன்பிறகு சிறுமியை ஒரு வீட்டில் சிறை வைத்துள்ளார். அங்கு ராஜபாண்டியின் நண்பர் ரமேஷ் என்பவரும் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜபாண்டி மற்றும் ரமேஷ் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அதன்பிறகு சிறுமியை பத்திரமாக காப்பகத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.