தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும், ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது.
சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக மீண்டும் பாஜக அரசு அமைகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் இருந்த அரசு தோல்வி அடைந்து காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்நிலையில் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களின் தரம் வளத்தை உறுதி செய்ய வாழ்த்துதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to the winning parties in the state legislative elections of #Telangana, #MadhyaPradesh, #Chhattisgarh, and #Rajasthan!
Wishing them a term filled with positive change, progress, and prosperity for people from all sections.#ElectionResults
— M.K.Stalin (@mkstalin) December 3, 2023