கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வினை கடந்த நவம்பர் மாதம் முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. நேர்முகத் தேர்வுக்கான எஞ்சிய இரண்டு நாட்கள் நாளை  மற்றும் 6ஆம்  தேதி ஆகிய நாட்களுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், மிக்ஜம் புயல் புயல் காரணமாக வருகின்ற திங்கள்கிழமை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வெளியிட்டதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

நேர்முகத் தேர்வு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 4ஆம் தேதி நாளை நடைபெற இருந்த நேர்முகத்தேர்வு புதன்கிழமைக்கும்,  புதன்கிழமை நடைபெற இருந்த நேர்முகத்தேர்வு வியாழக்கிழமைக்கும் மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே திங்கட்கிழமை நாளைக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்த தேர்வாளர்கள் அனைவரும் நாளை மறுநாள் புதன்கிழமை வர வேண்டும் என  சொல்லி இருக்கிறார்கள். இந்த  அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி என்னுடைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.