திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை ஜெயமாதா நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்திவேல்(15) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் அவரது உறவினர் மகள் யோகேஸ்வரி(15), நண்பர்களான நிஷாந்த்(14), அஸ்வினி(14) ஆகிய நான்கு பேரும் பார்சம்பேட்டை கடைத்தெரு வழியாக சாலையில் நடந்து சென்றனர்.

அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நான்கு பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.