தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். அதே ஹோட்டலில் பால்பாண்டி என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலை முடிந்த பிறகு தினமும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு இருவரும் தூங்கு சென்றனர். அப்போது கட்டிலில் யார் படுத்து தூங்குவது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் போதையில் அப்படியே தூங்கிவிட்டனர். மறுநாள் காலை கட்டிலில் படுப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டபோது போதை தலைக்கேறி பால்பாண்டி செங்கலால் சரவணனை தாக்கி உள்ளார். இதனால் மயங்கி கிடந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பால்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.