தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் முத்து கிராமம் அம்மன் கோவில் தெருவில் முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வ முருகன் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வ முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.