திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுக்காம்பட்டி களத்து வீடு பகுதியில் விவசாய துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்ராஜுக்கும் இடையே பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசாமி தோட்டத்தில் இருந்த போது சின்ராஜ் தனது உறவினர்களுடன் இணைந்து அவரை சரமாரியாக தாக்கினார்.

இதனால் காயமடைந்த துரைசாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சின்ராஜ், அவரது மகன் நீலமணி, சகோதரர்கள் ராமராஜ், தாசப்பன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.