வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான விஜி. இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குழந்தை இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு வந்த நல்ல பாம்பு குழந்தையை கடித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்த நிலையில் சடலத்தை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாலை வசதி இல்லாததால் பாதி வழியிலேயே விட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து சுமார் 10 கிமீ தூரத்துக்கு பெற்றோரே குழந்தையின் சடலத்தை சுமந்து சென்றுள்ளனர்.  இந்த சம்பவமானது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.