ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷ வண்டு கடித்ததில் விஏஓ ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஏஓ இன்று தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என்று பார்ப்பதற்காக மாடிக்கு சென்றள்ளார். அப்போது அவரை அங்குள்ள மரத்திலிருந்த விஷ வண்டு கடித்தது.

இதையடுத்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.