திருநெல்வேலியில் இருந்து மேடை அலங்கார பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பெரியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதே வேனில் ஆறு பேர் பயணம் செய்துள்ளனர் இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன்பட்டி அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பெரியசாமி, பொன்னுசாமி, சிவலிங்கம் ஆகிய மூன்று பேரும் காயமடைந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.