திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கோபால்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரன்(67) என்பது தெரியவந்தது. மேலும் ரவீந்திரன் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரவீந்திரனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.