அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருமடல் வடக்கு தெருவில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(37) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்றாம் தேதி அலமேலு வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அப்போது மழைக்காக புளிய மரத்தடியில் ஒதுங்கி நின்ற போது மின்சாரம் தாக்கி அலமேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கலெக்டர் அலமேலுவின் வாரிசுதாரர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.