அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேந்திரன் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் வேலை பார்க்கும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் கலையரசனை பாராட்டும் விதமாக ராஜேந்திரன் அவருக்கு கேடயம் வழங்கி பாராட்டியுள்ளார். மேலும் ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த 60 மாணவர் மாணவிகளுக்கும் ராஜேந்திரன் பரிசுகளை வழங்கியுள்ளார்.