கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதில் சௌமியா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷும் அவரது தாய் சசிகலாவும் இணைந்து சௌமியாவிடம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சௌமியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷ் மற்றும் அவரது தாயை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் ராஜேஷுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சசிகலாவுக்கு 7 ஆண்டுகள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.