விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீடூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து செஞ்சி தாலுகா கொம்மேட்டை சேர்ந்த ராஜ் (41), ராம்கி (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 60 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.