நடிகை சமந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். ஏனெனில் அவர் மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஓரளவிற்கு குணமாகியுள்ளார். இதனையடுத்து முழுமையாக ஓய்வெடுக்க சினிமாவில் இருந்தே பிரேக் அறிவித்து இருக்கிறார்.

தற்போது சமந்தா இந்தோனேசியாவில் பாலிக்கு தோழிகளோடு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமந்தா நான்கு டிகிரி குளிர்ந்த நீரில் குளித்திருக்கிறார். அவர் 4 டிகிரி குளிர்ந்த நீரில் ஆறு நிமிடம் ஐஸ் பாத் எடுக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.