தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம். இவர் சிம்புவுக்கும் தனக்குமான நட்பை பற்றியும் முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார். DD ரிட்டன்ஸ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், நான் சினிமாவுக்கு வந்ததற்கு காரணமே சிம்பு சார் தான்.

அவர் இல்லை என்றால் நான் சினிமாவில் இருந்திருப்பேனா என தெரியவில்லை. மன்மதன், வல்லவன், காளை,வானம் மற்றும் ஒஸ்தி என அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் நானும் இருக்க வேண்டும் என அன்போடு நினைத்தார் என்று சந்தானம் கூறினார். மேலும் சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவள் தான் நடிகர் சந்தானம். இவர் மன்மதன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.