தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

தற்போது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னா கையில் மிகப்பெரிய மோதிரத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அது, வைர மோதிரம் என்றும், உலகின் 5-வது பெரிய வைரம் அது என்றும் நடிகர் ராம் சரணின் மனைவி தமன்னாவுக்கு பரிசாகக் கொடுத்தார் என்றும் செய்திகள் வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், ”ஒரு போட்டோஷூட்டுக்காக அணிந்தது அது. வெறும் ‘பாட்டில் மூடி’தான், அது வைரம் இல்லை” எனக் கூறியுள்ளார்