தல அஜித் தற்போது துணிவு படத்தில் வெற்றிக்கு பிறகு விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார் அனிருத் இசை அமைக்க இருக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் ஆனாலும் இன்றளவும் படத்தின் சூட்டிங் தொடங்கவில்லை இதனால் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து ஆகஸ்ட் 18ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் டிவி தொகுப்பாளரான கோபிநாத் அஜித்தை பேட்டி எடுத்த அனுபவம் குறித்து பேசி உள்ளார்.

அஜித்தை ஒரு சில வருடங்களுக்கு முன்பு பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அஜித் சற்று பேச தயங்கினார் வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்தினார் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டதற்கு நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழ் பேச சரளமாக வராது. ஆங்கிலத்தில் மட்டுமே பேட்டி கொடுத்தேன். உடனே சிலர் இவர் தமிழ் படத்தில் நடிக்கிறார் ஆனால் தமிழ் பேச மாட்டாரா என்று கூறினார்கள். இதன் காரணமாக பேட்டி கொடுப்பதை நிறுத்தினால் ரொம்ப ஓவரா பேசுறாரு என்று சொல்கிறார்கள். எது செய்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள் அதன் காரணமாக தான் சற்று எனக்கு தயக்கம் இருக்கிறது என்று கூறினார்.