பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற மாவட்டத்தில் வசித்து வரும் சீமாதேவி என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் உள்ளன. இவருடைய கணவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரயிலில் விழுந்து உயிரிழந்த நிலையில் தனிமையில் இருந்த சீமா தேவிக்கு தன்னுடைய சொந்தக்கார சகோதரியின் மாமனார் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இருவரும் தங்களுடைய காதலை பரிமாறிக் கொண்ட நிலையில் இந்த விஷயம் உறவினர்களுக்கு தெரிய வர மறுப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நாங்கள் கட்டாயம் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறி காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸ் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.