இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் 2000 நோட்டுகளை வைத்து நடந்த மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனியை சேர்ந்த சிவாஜி என்பவரிடம் ஒருவர் போனில் 35 லட்சம் கொடுத்தால் பதிலுக்கு 2000 நோட்டுகளில் 50 லட்சம் தருவதாக கூற, அதை நம்பி சேலத்திற்கு பணத்தை எடுத்துச்சென்று கொடுத்துள்ளார். அப்போது போலீஸ் என வந்தவர்கள், பணம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என சிவாஜியை தவிர்த்து மற்றவர்களை பணத்துடன் அழைத்துச்சென்று மோசடி செய்துள்ளனர்