தமிழ்நாட்டில் நேற்று  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ், நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ். பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ், வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ், கலையரசி வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்குத்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.