சேலம் மாவட்டத்தில் உள்ள மூணாங்காடு திருவள்ளுவர் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் கணேசன்- சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய லத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லத்திகாவுக்கு காய்ச்சல் வந்ததால் உடல் சோர்வடைந்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்து டாக்டர்கள் லத்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.