சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனசேகர் விஷம் குடித்து மயங்கி கிடந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனசேகர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் கடனாக பணம் வாங்கினார். அதற்கு வட்டியும் கொடுத்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று பணத்தை திரும்ப தருமாறு அந்த பெண் தனசேகரிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து தன்னை தர குறைவாக பேசிய தனசேகரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் போலீசார் விசாரணைக்கு வருமாறு தனசேகரை அழைத்தனர். அதன்பிறகு அவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்தனர்.