மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை நான்கு வழி சாலை வழியாக சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் போலீசார் துவரிமான் சந்திப்பை அடுத்த கண்மாய் கரை அருகே தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த குற்றத்திற்காக கேரள மாநிலத்தை சேர்ந்த மன்சூர் அலி, முத்தாலிப், நாசர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் இருந்த 100 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.