தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயேந்திரன்(47). இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு  3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி பெண் குழந்தைக்கு 2 வயது. கடந்த சில மாதங்களாக விஜயேந்திரன் மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்ததால் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் விஜயேந்திரன் அருகிலுள்ள தென்னந்தோப்புக்கு சென்று பூச்சி மருந்தை குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயேந்திரன் வரும் வழியில் இறந்துவிட்டதாக கூறினர். இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.