தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர்நத்தம் பகுதியில் கோவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சபரிவாசன், சித்தார்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 13-ஆம் தேதி நதியா தனது மகன்களுடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் உறவினர் வீட்டிற்கு செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்ப வரவில்லை.

இதனால் உறவினர்கள் நதியாவையும் குழந்தைகளையும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து கோவிந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.