அண்மையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜூன் 3ஆம் தேதிக்குள் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கு டார்கெட் கொடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து கட்சியில் கூடுதலாக உறுப்பினர் சேர்ப்பது, நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.