திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் காதல் திருமணம் செய்த பெண் அஷ்டலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மனைவி இறந்ததை பார்த்த அவரது கணவர் சுபாஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 மாத குழந்தை உள்ள நிலையில், தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் இறந்தது தெரியாமல் அந்த குழந்தை அம்மாவின் அருகில் இருந்தது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.