சமூக வலைத்தளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான காணொளிகள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம் மனதைத் தொட்டு முகத்தில் புன்னகையை வரவழைத்துவிடும். அப்படிப்பட்ட ஒரு அழகான காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், ஒரு நபர் தனியாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவதற்காகத் தனது உணவுப் பெட்டியைத் திறக்கிறார்.

அப்போது அங்கே வந்த ஒரு சிறிய அணில், அவரது உணவுப் பெட்டியைச் சுற்றிக் குறும்புத்தனமாகச் சுற்றி வருகிறது. அந்த நபர் மிகுந்த கவனத்துடன் தனது உணவுப் பெட்டியைத் திறந்து, அதிலிருந்து ஒரு சில அரிசிச் சோறுகளை மட்டும் எடுத்து அணிலுக்கு வைக்கிறார். அந்தச் சோறைச் சாப்பிட்ட அணில், மீண்டும் உணவுப் பெட்டிக்குள் எட்டிப் பார்க்கிறது.

​அணிலின் இந்தக் குறும்புச் செயலைப் பார்த்த அந்த நபர், இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே சோற்றை எடுத்து அணிலுக்கு வைக்கிறார். அந்தச் சோற்றை அணில் ஆசையாகச் சாப்பிடத் தொடங்குகிறது. அணில் உணவைச் சாப்பிடுவதில் பிஸியாக இருக்க, அந்த மனிதரும் நிம்மதியாகத் தனது மதிய உணவைச் சாப்பிடுகிறார்.

இந்த மனதைக் கவரும் நட்புறவின் காணொளியை @devanshbarua7 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த நட்பை எங்களால் பிரிக்க முடியாது”, “அணிலுக்கு VIP மரியாதை கிடைக்கிறது”, மற்றும் “2025-ன் க்யூட்டான தருணம் இதுதான்” என்று அன்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.