நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூடுதலாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.4.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கீழ்கண்டவர்கள் கீழ்காணும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி “இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு மலேசியா எஸ்.பாண்டியன், எம்.எஸ் நிறைகுளத்தான், எஸ்.எம் சாமிநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் தொகுதிக்கு என்.சதன் பிரபாகர், கு.ராஜமாணிக்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு தொகுதிக்கு கே.எஸ் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.