தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த தொடரில் முதல் போட்டியில் போட்டி தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்காவும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களின் அணிகளை அறிவித்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இதில் மூன்று ரெப்ரிகள், பத்து கள நடுவர்கள் உட்பட 13 பேர் அறிவித்துள்ளனர். இந்த நடுவர்கள் குழுவில் இந்தியா சார்பாக மூன்று பேர் உள்ளனர்.ஜிஸ் லெட்சுமி (ரெப்ரீ), விருந்தா ரதி, என் ஜனனி 2 பேரும் நடுவர்கள் ஆகியோர் உள்ளனர்.

போட்டி நடுவர்கள்: ஜி.எஸ். லெட்சுமி (இந்தியா), ஷாண்ட்ரே பிரிட்ஸ் (தென் ஆப்பிரிக்கா), மிட்செல் பெரேரா (இலங்கை). Also Read – 2023 உலகக் கோப்பை வரை ஆலன் டொனால்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு – வங்காளதேச கிரிக்கெட் வாரியம்…! நடுவர்கள்:- சூ ரெட்ப்பெர்ன் (இங்கிலாந்து), எலோயிஸ் ஷெரிடன் (ஆஸ்திரேலியா), கிளாரி பொலோசாக் (ஆஸ்திரேலியா), ஜாக்குலின் வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கிம் காட்டன் (நியூசிலாந்து), லாரன் ஏஜென்ஸ்பெர்க் (தென் ஆப்பிரிக்கா), அன்னா ஹாரிஸ் (இங்கிலாந்து), விருந்தா ரதி (இந்தியா), என். ஜனனி (இந்தியா), நிமாலி பெரேரா (இலங்கை).