திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் பாண்டி (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாண்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம்  பாண்டிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து இந்திய தண்டனை சட்டம் 354 பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.