தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் பிள்ளை தெருவில் அலியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் அந்தோணி ஞானபிரகாசமும் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டி என்பவர் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி விட்டு பணம் கொடுக்கவில்லை. இதனால் அந்தோணி சௌந்தரபாண்டியிடம் சிகரெட் பணத்தை தருமாறு கேட்டார்.

இதில் கோபமடைந்த சௌந்தரபாண்டி தனது நண்பர்களான செல்வ பெருமாள், கோபி, கலாம் ஆகியோருடன் இணைந்து அந்தோணியை தாக்கி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதனால் காயமடைந்த அந்தோணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வபெருமாள், கோபி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.