திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கோட்டியப்பன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் பேட்டை- சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென கோட்டியப்பனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மெயின் ரோட்டை விட்டு கீழே இறங்கி சாலையோரம் இருந்த தனியார் நிறுவனம் சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதனையடுத்து காயமடைந்த கோட்டியப்பனை ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.