சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் சத்ய நாராயணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது கடையில் பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்கள் சுமார் 50 பவுன் தங்க நகைகளை கொடுத்தனர். இந்நிலையில் கடையில் வேலை பார்க்கும் ஊழியரான பிரப்பீர்ஷேக் என்பவர் நகைகளை அடகு வைத்து மோசடி செய்துவிட்டார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பிரப்பீர்ஷேக், தனது நண்பரான பாலமுருகனுடன் இணைந்து நகைகளை அடகு வைத்து மோசடி செய்தது உறுதியானது. இதனால் பிரப்பீர்ஷேக் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.