சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் மூர் தெருவில் ஆட்டோ டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மகேஸ்வரன் ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனால் சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். மேலும் ஏற்கனவே மகேஸ்வரனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.