கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து கிருஷ்ணாபுரம் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பவரும் நேற்று மாலை 6 மணிக்கு அளவுக்கு அதிகமாக குடித்தனர். பின்னர் குடிபோதையில் வாகனங்களில் சென்றவர்களை கத்தியை காட்டிவிட்டு தகராறு செய்தனர்.

இதனை அந்த ஊர் நாட்டாமை சங்கர் என்பவர் தட்டி கேட்டார். இதனால் கோபமடைந்த இருவரும் சங்கரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தப்பிய இருவரையும் தேடி வருகின்றனர்.